×

முத்துப்பேட்டை பேரூராட்சி வரி உயர்த்தும் திட்டத்தை எதிர்த்து போராட்டம்

முத்துப்பேட்டை அக்.16 : முத்துப்பேட்டை பேரூராட்சி வரி உயர்த்தும் திட்டத்தை எதிர்த்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ நிர்வாகிகள் கட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை நகர காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நகர தலைவர் ஜகபர்அலி தலைமையில் நடைபெற்றது. வட்டார தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முன்னதாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் மெட்ரோமாலிக் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் துரைவேலன் பேசினார். அப்பொழுது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இதில் முத்துப்பேட்டை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தவேண்டும் என்று 18ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய பேரூராட்சி நிர்வாகம் தீர்மானித்து பல்வேறு பணிகளை மேற்கொண்டது. அதற்காக அப்போது நகராட்சிக்குரிய வரி  உயர்த்தப்பட்டது. ஆனால் இன்றுவரை நகராட்சியாக மாறாதநிலையில் அந்த வரி உயர்வை திரும்ப பெறவேண்டும் என்று இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்பொழுது மீண்டும் வரி சீராய்வு என்றபேரில் முத்துப்பேட்டையில் மீண்டும் வரி உயர்வை ஏற்ப்படுத்தும் விதமாக அதற்கான பணியில் பேரூராட்சி சார்பில் ஈடுபட்டு வருவதை இந்த கூட்டம் கண்டிக்கிறது. மேலும் இதனை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் சமூக ஆர்வலர் முகமது மாலிக், மாவட்ட அமைப்பு செயலாளர் கோவிரெங்கசாமி, நகர  துணைத்தலைவர்வர்கள் . பொருளாளர் சந்திரமோகன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Tags : fight ,
× RELATED எலக்சன் பர்ஸ்ட் லுக் வெளியானது