×

திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு அரசுப் பள்ளியில் இளைஞர் எழுச்சிநாள் விழா

திருத்துறைப்பூண்டி, அக். 16: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாள் இளைஞர் எழுச்சிநாள்விழாவாக கொண்டாடப்பட்டது.
பள்ளிதலைமையாசிரியர் பாலு தலைமைவகித்தார்.  ஆசிரியை வேம்பு வரவேற்றார். பேராசிரியர்  அப்துல்மாலிக் கலந்து கொண்டு இளைஞர் எழுச்சிஎன்பது விழித்தெழுந்து நிற்பது என்றும் மேலும் ஒவ்வொரு விழாவில் நாம் ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கலாம் பின்பற்றியஆசைபடுதல், முயற்சி செய்தல், எதிர்பார்த்தல் ஆகிய மூன்று நெறிகளையும் பின்பற்ற வேண்டும் என்றார் .தொடர்ந்து மாணவ.மாணவிகளின் பல்வேறுகலைநிகழ்ச்சிகள்நடைபெற்றது.

மாணவமாணவிகளுக்கு நாடகம், கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் ஆசிரியர் ஐயப்பன் நன்றிகூறினார். பிறவிமருந்தீசர் கோயிலில் நவராத்திரி விழா
திருத்துறைப்பூண்டி, அக்.16: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீசர் கோயிலில் நவராத்திரி விழா கடந்த 10ம்தேதி (புதன்கிழமை )தொடங்கி நடைபெற்று வருகிறது.அதனையொட்டி கொலு அமைக்கப்பட்டுள்ளது.
அதனைதினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பார்த்து வருகின்றனர்.தினந்தோறும் இரவு நேரங்களில் கலைநிகழ்ச்சி மற்றும் இசைநிகழ்ச்சிகள்நடைபெற்று வருகிறது.தினமும் மங்கள நாயகி ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். நேற்று முன் தினம் இரவு அனைத்து பள்ளிமாணவமாணவிகளில் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு ஆன்மீகம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டு பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் செயல் அலுவலர் முருகையன், மேலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Youth Awakening Ceremony ,Thiruthuraipondi ,Koothumedu Government School ,
× RELATED திருத்துறைப்பூண்டி தாலுகாவில் காலை,...