ஓசூர், அக்.16: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ஏஎஸ்டிசி அட்கோ குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் செல்வதற்கான பைப் லைன் உள்ளது. அவை முறையாக சீரமைக்கப்படாததால் அவ்வப்போது உடைந்து கழிவுநீர் சாலையில் வழிந்தோடும் அவலம் காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் மக்கள், மாணவ, மாணவிகள் மூக்கை பிடித்தபடி ஓடும் நிலை உள்ளது. தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் நகராட்சி நிர்வாகம் உடனடியாக பைப்லைனை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.