6 மாத சம்பளம் கேட்டு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் 15வது நாளாக உண்ணாவிரதம்

பாபநாசம், அக். 16: 6 மாதம் சம்பளம் வழங்ககோரி திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை முன் 15வது நாளாக தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஊழியர்களுக்கு கடந்த 6 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. மேலும் சம்பளத்தில் பிடித்தம் செய்த எல்ஐசி, ஈபிஎப், கிரெடிட் சொசைட்டி, ஸ்டோர், வங்கி கடன் உள்ளிட்டவற்றுக்கு பணம் செலுத்தவில்லை. 2012 முதல் ஈட்டிய விடுப்பு பணம் வழங்கவில்லை. 22017ம் ஆண்டு போனஸ், பண்டிகை முன்பணம் வழங்கவில்லை. எனவே இதை கண்டித்து சர்க்கரை ஆலை முன் கடந்த 1ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தை தொழிலாளர்கள் தொடர்ந்தனர். இந்நிலையில் நேற்று 15வது நாளாக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இதில் திரளான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

Related Stories: