×

தேசிய நீர் விருதுகளை பெறவிண்ணப்பிக்க அழைப்பு

தஞ்சை, அக்.16: நீர்சேமிப்பு மற்றும் பாதுகாப்பில் சிறந்த திறன் உடையோர், தேசிய நீர் விருதுகளை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள இந்திய அரசின் நீர் ஆதாரம், ஆறு மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகத்தால் நீர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பில் சிறந்த திறன் உடையோருக்கு வழங்கப்படும் தேசிய நீர் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த விருதுகளுக்கு கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், சிறு மற்றும் குறு, பெரிய வர்த்தக நிறுவனங்கள், சுற்றுலா தலங்கள், புகழ்பெற்ற கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.1.50 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை www.mowr.gov.in, www.cgwb.gov.in ஆகிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மத்திய நில நீர்வாரியத்திற்கு நவம்பர்  30ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

Tags :
× RELATED தஞ்சாவூரில் சிறுதானிய பயிர்கள்...