×

டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பாபநாசம், அக். 16: பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. தலைமையாசிரியர் மணியரசன் தலைமை வகித்தார். அப்போது மாணவர்கள் தங்களது இருப்பிடத்தில் மழைநீர் தேங்காதவாறு செயல்பட வேண்டும், சாலைகளில் பாதுகாப்பாக செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. பள்ளி உதவி தலைமையாசிரியர் ரமேஷ், பாபநாசம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில் குமரகுரு, பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முருகன் பங்கேற்றனர். இதேபோல் பள்ளி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியில் பொதுமக்களிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தலைமையாசிரியர் மணியரசன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முருகன், பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழியன் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

Tags :
× RELATED தஞ்சாவூரில் சிறுதானிய பயிர்கள்...