பாபநாசம், அக். 16: அம்மாப்பேட்டை அடுத்த மகிமாலையில் அரசின் சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது. பாபநாசம் தாசில்தார் மாணிக்கராஜ், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அருட்பிரகாசம், அம்மாபேட்டை ஆர்ஐ சத்யராஜ், கிராம நிர்வாக அலுவலர் காசிநாதன் பங்கேற்றனர். முகாமில் பயனாளிகளிடம் இருந்து 34 மனுக்கள் வரப்பெற்றன.