திருக்காட்டுப்பள்ளி, அக். 16: திருக்காட்டுப்பள்ளியில் பூதலூர் வடக்கு ஒன்றிய ஜனநாயக வாலிபர் சங்க கூட்டம், பதிய பொறுப்பாளர்கள் தேர்வு நடந்தது. ஒன்றிய தலைவர் கவியரசன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். புதிய தலைவராக சக்திவேல், துணைத்தலைவராக ராஜ்குமார், செயலாளராக ஸ்ரீதர், துணை செயலாளராக கவியரசன், பொருளாளராக செபஸ்டின்ராஜா தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் பூதலூர் வடக்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் காந்தி, ஒன்றியக்குழு சிவசாமி, சம்சுதீன், முருகேசன், ரமேஷ், மாதர் சங்க கலைச்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.