புதுக்கோட்டை, அக். 16: புதுக்கோட்டை கலெக்டர் கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டையில் வரும் 25ம் தேதி பிற்பகல் 4 மணிக்கு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காஸ் இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களுக்கு, பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள் மற்றும் காஸ் சிலிண்டர் வழங்குவதில் காலதாமதம் போன்ற குறைபாடுகள் குறித்து வரப்பெறும் புகார்களைப்பெற்று உரிய நடவடிக்கைகள் எடுத்து எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு விநியோகத்தை சீர்படுத்த இக்குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
இணைப்பு குறித்து தங்களது குறைகளை தெரிவிக்க விரும்பும் காஸ் இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் நேரில் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.