×

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி

புதுக்கோட்டை, அக்.16: இந்திய தேர்தல் ஆணையத்தால் பாராளுமன்ற பொது தேர்தல் 2019க்காக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி கடந்த 10ம் தேதி அங்கரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று நடைபெற்ற மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணியை கலெக்டர் கணேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்து, ஆலோசனைகளை வழங்கினார். சரிபார்க்கப்பட்ட எந்திரங்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர பாதுகாப்பு வைப்பு அறையிலேயே வைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED அறிவொளி கருப்பையா தகவல் கட்சியினர் வீதிவீதியாக வாக்குசேகரிப்பு