×

பொன்னமராவதி வலையபட்டியில் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத சலவை தொட்டி

பொன்னமராவதி,அக்.16: பொன்னமராவதி  பேரூராட்சி வலையபட்டியில் கட்டி முடிக்கப்பட்டு நீண்ட மாதங்கள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ள சலவை தொட்டியினை பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என சலவைத்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வலையபட்டியில் கழுதை புரளிக் குளம் உள்ளது. இந்த குளத்தில் இப்பகுதி சலவைத்தொழிலாளர்கள் சலவை செய்து பிழைத்து வருகின்றனர். மழையில் நனைந்தும், வெயில்  நின்றும் தொழில் செய்து வந்தனர். தங்களது குடிநீர் வசதியுடன் சலவைக்கூடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். இதன் அடிப்படையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு  போர்வெல் அமைத்து, சலவை தொழில் செய்ய தொட்டிகள் கட்டப்பட்டது. கட்டிமுடிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் இந்த சலவை தொட்டியினை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் கிடக்கின்றது. எனவே சலவை தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் கட்டிமுடிக்கப்பட்ட சலவை தொட்டியினை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்து இதற்கு சலவைக்கூடமும் அமைத்து தரவேண்டும் என சலவைத்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ponnaravarai ,
× RELATED பொன்னமராவதி அருகே ஏனமாரியம்மன் கோயிலில் பால்குட விழா