×

திருமயம் தாசில்தார் அலுவலகம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்

புதுக்கோட்டை, அக். 16: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம்  தாசில்தார்  அலுவலகத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகளைகலெக்டர் கணேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் பழமையான கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. இக்கட்டடத்தில் ஏற்பட்ட பழுதுகளை சீரமைக்கும் வகையில் பொதுப்பணித்துறையின் சார்பில் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் தாசில்தார்  அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட மேல்தளம் சீரமைப்பு, வர்ணப்பூச்சு, தரைத்தளத்தில் டைல்ஸ் பதித்தல், ஜன்னல்கள் மற்றும் கதவுகள் சீரமைப்பு பணிகள் மற்றும் இதர பணிகள் மேற்கொள்ளப்பட்டதை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.மேலும் தாசில்தார் அலுவலகத்தில் புதிதாக வாகனம் நிறுத்தும் இடமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம்  தாசில்தார் அலுவலகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு சரிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தாசில்தார்அலுவலகம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இவ்வாறு  கலெக்டர் கணேஷ் தெரிவித்தார்.

Tags : office ,Tahsildar ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்