×

டீச்சர்ஸ் காலனியில் தேங்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு

தர்மபுரி, அக்.16: தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட டீச்சர்ஸ் காலனியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள தனியார் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பகுதியில் சேகரமாகும் குப்பைகள், தனியார் பள்ளியை ஒட்டிய தெருவில் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகள் கடந்த 15 நாட்களுக்கும் அகற்றப்படாததால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, நகராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க ேவண்டும் என அப்பகுதி மக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : teacher ,colony ,
× RELATED கல்லூரி மாணவர்களின் வாக்காளர்...