×

ஓலை குடிசைகளில் வசிக்கும் வயக்கல்லூர் மக்களுக்கு இலவச வீடு வழங்க வேண்டும்

நாகர்கோவில், அக். 16: இலவச வீடு வழங்க வேண்டும் என்று கேட்டு ஏழுதேசம் வருவாய் கிராமம் வயக்கல்லூர் பகுதி மக்கள் நேற்று குமரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். தமிழ்நாடு ஆதி திராவிடர் இந்து தண்டான் சமுதாய முன்னேற்ற சங்க மாநில தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: விளவங்கோடு தாலுகா ஏழுதேசம் வருவாய் கிராமம் வயக்கல்லூர் பகுதியில் ஆதி திராவிடர் இந்து தண்டான் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் ஓலை குடிசைகளில் நீண்டகாலமாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பசுமை வீடு அல்லது பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகள் வழங்க வேண்டும் என கேட்டு ஏழுதேசம் பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் விண்ணப்பித்து 3 ஆண்டுகளாகியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

பின்னர் பலமுறை சென்று கேட்டும் வீடுகள் கிடைக்கவில்லை. கூலிவேலை செய்து, வேறு வருமானம் இன்றி, ஓலை குடிசைகளில் குடும்பத்துடன் வசிக்கும் மக்களுக்கு இலவச வீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : house ,Vayalellar ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்