×

மார்த்தாண்டத்தில் தலைமறைவு கொள்ளையன் கைது

மார்த்தாண்டம், அக். 16: மார்த்தாண்டம் அருகே காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் என்ற நவுஷாத்(47). பிரபல கொள்ளையன். இவர் மீது மார்த்தாண்டம், தக்கலை, வடசேரி உட்பட பல காவல் நிலையங்களில் வீடு புகுந்து திருட்டு, கடைகளை உடைத்து கொள்ளை என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ேமலும் கேரள மாநில காவல் நிலையங்களிலும் பல வழக்குகள் உள்ளன. கடந்த ஓராண்டுக்கு முன்பு இவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ஜாமீனில் சென்ற அவர் அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதைத்தொடர்ந்து நவுஷாத்துக்கு நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. கடந்த ஓராண்டாக மார்த்தாண்டம் போலீசார் நவுஷாத்தை தேடி வந்தனர். இருப்பினும் அவர் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மார்த்தாண்டம் பகுதியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்தனர்.

Tags : robbery ,
× RELATED திண்டுக்கலில் பெட்ரோல் பங்க்...