மார்த்தாண்டம், அக். 16: திக்குறிச்சி மகாதேவர் கோயிலையொட்டி குழித்துறை தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கர விழா கடந்த 12ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி பக்தர்கள் நீராட வசதியாக பள்ளமான பகுதிகளை நிரப்ப விழா கமிட்டியினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக மண் எடுத்து செல்ல விளவங்கோடு தாசில்தாரிடம் விழா கமிட்டியினர் அனுமதி வேண்டியிருந்தனர். அதற்கு தாசில்தாரும் அனுமதி வழங்கி இருந்தார். ஆனால் இதை பயன்படுத்தி ஒரு கும்பல் 50 லோடு மண்ணை அருகில் உள்ள செங்கல் சூளைகளுக்கு ெகாண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. தொடர்ந்து உஷாரான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நேற்று முன்தினமும் கோயிலுக்கு மண் கொண்டு செல்வதாக கூறி செங்கல் சூளைகளுக்கு மண் கடத்தி சென்றதை கண்டுபிடித்த போலீசார், அந்த வாகனங்களை எச்சரித்து விடுவித்தனர்.