×

தூத்தூர் இளைஞர்கள் கலெக்டரிடம் மனு

நாகர்கோவில், அக். 16: இரயுமன்துறையை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் தலைமையில் இளைஞர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
 தூத்தூர் ஊராட்சியில் கடந்த அக்டோபர் 2ம் தேதி நடந்த கிராம சபா கூட்டம் முறையான முன்னறிவிப்பு இன்றியும், பொதுமக்கள் பங்கேற்காமலும் நடத்தப்பட்டது. அதுபோல அக்டோபர் 12ம் தேதி நடந்த சிறப்பு கிராம சபா கூட்டமும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மறைமுகமாக நடந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, 100 நாள் வேலைக்கான கூட்டம் என பதிலளித்தனர்.

அப்போது பொதுமக்கள் அங்கு கூடியதால், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இனி நடக்கும் கிராம சபா கூட்டங்கள் முறையாக அறிவிப்பு வழங்கி நடத்தப்படும் என தெரிவித்தனர். ஆனால் அதன் பின்னர் அக்டோபர் 13ம் தேதி சின்னத்துறையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 6 பேரை கொண்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடத்தியது போன்று ஏற்பாடு செய்து சென்றுள்ளனர். எனவே தூத்தூர் ஊராட்சியில் விதிமுறைகளின்படி கிராம சபா கூட்டத்தை நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Thoothukur ,collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...