×

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

நாகர்கோவில், அக். 16: மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு குறைதீர்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே தலைமையில் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெற்றது. அப்போது 26 நபர்களிடம் இருந்து வங்கி கடன், மாதாந்திர உதவித்தொகை, வீட்டுமனை வேண்டியும் மற்றும் சான்றுகள், மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனம், வேலைவாய்ப்பு வேண்டியும் மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன. மனுக்கள் மீது  துறை அலுவலர்கள் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாவட்ட கலெக்டரால் அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மற்றும் பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED தமிழ்நாட்டில் முதல் முறையாக ரோஜாவனம்...