×

பெண் போலீஸ் கணவர் தற்கொலை

குலசேகரம், அக். 16: திருவட்டாரில் சிஆர்பிஎப் பெண் போலீசின் கணவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவட்டார் அருகே உள்ள கண்ணனூரை சேர்ந்தவர் ராஜேஷ் (31) கொச்சி துறைமுகத்தில் பணி புரிந்தார். இவருக்கு ஷேபா (27) என்ற மனைவி உள்ளார். இவர் ஐதராபாத்தில் சிஆர்பிஎப் போலீசாக உள்ளார். தற்போது குழந்தை பிறந்து 6 மாதமாக வெள்ளியோடு பகுதியில் உள்ள தாய் வீட்டில் உள்ளார். நேற்றுமுன்தினம் ராஜேஷ் தனது மனைவியை பார்க்க வந்தார். அதன்பின் மனச்சோர்வுடன் தனது வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவரது அறை கதவு திறக்கப்படவில்லை. வீட்டில் உள்ளவர்கள் கதவை உடைத்து உள்ளே பார்க்கும்போது உத்தரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ரஜேஷ் இறந்து கிடந்தார். திருவட்டார் போலீசார் வந்து ராஜேஷ் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Girl police suicide ,
× RELATED காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பால்...