கரூர், அக.16: கரூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் பலியானார். கரூர் அருகே உள்ள அருகம்பாளையம் தங்கநகரை சேர்ந்த பெருமாள் மனைவி ராஜாமணி(42). வீட்டில் தறி வைத்து நடத்தி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக ராஜாமணிக்கு காய்ச்சல் இருந்து வந்தது. நேற்று முன்தினம் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். காய்ச்சலுக்காக மருத்துவமனையில் சேர்த்தோம். ஆனால் இசிஜி எடுத்து பரிசோதனை செய்துகொண்டிந்தனர். நேரடியாக சிகிச்சை அளிக்கவில்லை. அவ்வாறு சிகிச்சை அளித்திருந்தால் பிழைத்திருப்பார் என உறவினர்கள் கூறினர்.