×

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் 258 மனுக்கள் குவிந்தன

கரூர், அக். 16: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முதியோர், விதவை, மாற்றுத்திறானிகள் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா, தொழில்கடன், குடிநீர் வசதி போன்ற பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக வரப்பெற்ற 258 மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இம்முகாமில், டிஆர்ஓ சூர்யபிரகாஷ், மக்கள் குறைதீர்க்கும் தனித்துணை கலெக்டர் மீனாட்சி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் குமரேசன், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் லீலாவதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : office ,Karur Collector ,petitions ,meeting ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்