×

தகுதி வாய்ந்த சைக்கிள் வழங்க விளையாட்டு வீரர் கோரிக்கை

கரூர், அக்.16:  கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் குளித்தலை பகுதியை சேர்ந்த விளையாட்டு வீரர் கதிர்வேல் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த வேலங்காட்டுப்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். 10ம் வகுப்பு வரை படித்துள்ள நான், சிறுவயது முதலே சைக்கிள் போட்டியில் கலந்து கொள்வதில் ஆர்வம் கொண்டிருந்தேன். கடந்த 2016ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அளவில் நடந்த சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்றேன். தொடர்ந்து 2017ம் ஆண்டு திண்டுக்கல்லில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றேன். மும்பையில் நடந்த போட்டியில் 3ம் பரிசு பெற்றுள்ளேன். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளேன். 2018ம் ஆண்டு அக்டோபர் இறுதியில் நடைபெறவுள்ள தமிழக அளவிலான சைக்கிள் போட்டியிலும், நவம்பர் மாதத்தில் தேசிய அளவிலான சைக்கிள் போட்டியிலும் கலந்து கொள்ள உள்ளேன். நான் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். தற்போது உள்ள சைக்கிளை பயன்படுத்த முடியாத நிலையில், தகுதி வாய்ந்த சைக்கிள் போட்டியில் பங்கேற்க தேவைப்படுகிறது. எனவே, எனக்கு விலை உயர்ந்த சைக்கிள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில்  
தெரிவித்துள்ளார்.

Tags : player ,
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...