7பேரை விடுதலை செய்ய கோரி தமிழக கவர்னருக்கு அஞ்சல் அட்டை

ஈரோடு, அக். 16:  ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள  பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுதலை செய்ய கோரி தமிழக கவர்னருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.

ஈரோடு தலைமை தபால் அலுவலகத்தில் மக்கள் பாதை அமைப்பு சார்பில், தமிழக கவர்னருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். இதில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுதலை செய்ய கோரி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்திற்கு தமிழக கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி அஞ்சல் அட்டை அனுப்பப்பட்டது.

Related Stories: