×

ராஜகாளியம்மன் கோயில் திருவிழா அக்னிச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

சிவகாசி, அக் 16: சிவகாசி அருகே, வேண்டுராயபுரம் ராஜகாளியம்மன் கோயிலில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு, கிராம மக்கள் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிவகாசி அருகே, வேண்டுராயபுரம் ராஜகாளியம்மன் கோயிலில் புரட்டாசி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து அம்மனை வணங்கினர். திருவிழாவில் ஏராளமான பெண்கள் குடும்பத்துடன் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags : devotees ,festival ,Rajkalamyamman ,
× RELATED தாய்லாந்தில் நடைபெற்ற பச்சை குத்தும் திருவிழா!!