×

மது விற்ற 5 பேர் கைது

சிவகாசி. அக். 16: சிவகாசி பகுதியில் பெட்டிக்கடை, டீக்கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அனுமதியின்றி மது விற்பதாக சிவகாசி போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனடிப்படையில், பல்வேறு இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் அனுமதியின்றி மது விற்பனை செய்த மாரனேரி முனியராஜ் (52), திருத்தங்கல் கூடலிங்கம் (60), பள்ளபட்டி அன்னகொடி (60), திருவேங்கடம் சுரேஷ்குமார் (30), சுக்ரார்பட்டி ராஜா (45) உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் 45 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags :
× RELATED பணம் திருடியவர் கைது