×

பேரிடர் மீட்பு விழிப்புணர்வு பேரணி

உத்தமபாளையம், அக்.16: உத்தமபாளையத்தில் பேரிடர் மீட்பை பொதுமக்கள் எதிர்கொள்வது பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
உத்தமபாளையம் பகுதிகளில் பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேரணியை உத்தமபாளையம் பேரூராட்சி செயல்அலுவலர் பாலசுப்பிரமணியன்,விகாசா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் இந்திராஉதயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பைபாஸ்சாலையில் இருந்து பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக சென்று கிராமச்சாவடி, டிஎஸ்பி அலுவலகச்சாலை உள்ளிட்ட பகுதிகள் வழியே சென்றனர். இதில் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கருணாகரன், மேற்பார்வையாளர் ராஜா மற்றும் தீயணைப்புத்துறையினர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED களைகட்டிய தற்காலிக பூத்கள்