×

அரசு தோட்டக்கல்லூரியில் பணி நிரந்தரப்படுத்தக்கோரி வேலைநிறுத்தப் போராட்டம்

பெரியகுளம், அக்.16: பெரியகுளம் அருகே அரசு தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தனிக்கூலி பணியாளர்களை நிரந்தரப்பணியாளர்களாக மாற்றக்கோரி ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. பெரியகுளம் அருகே அரசு தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இந்த தோட்டக்கலைக்கல்லூரிக்குச் சொந்தமான நிலத்தில் சுமார் 80 தினக்கூலி பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 10 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை பணியில் இருந்து வருகின்றனர். இவர்கள் தொடர்ந்து தமிழக முதலமைச்சர், விவசாயத்துறை அமைச்சர் மற்றும் தோட்டக்கலை பல்கலைக்கழக அதிகாரிகளிடம் பல முறை பல மனுக்கள் அளித்து தினக்கூலி பணியாளர்களான தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை அளித்து வருகின்றனர்.

ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் தற்போது தங்களை நிரந்தரப்பணியாளர்களாக நியமிக்க பணி உத்தரவு வழங்கிட அரசை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தினக்கூலி தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் அனைத்து தினக்கூலி பணியாளர்களும் பங்கேற்றனர்.

Tags : Government ,
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...