×

திண்டிவனத்தில் மூடிக்கிடக்கும் அம்மா குடிநீர் விற்பனை நிலையம்

திண்டிவனம், அக். 16:
தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் நெடுஞ்சாலையோரம் உள்ள ஓட்டல்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலகட்டத்தில் போக்குவரத்து துறையின் சார்பாக மலிவு விலையில் அம்மா குடிநீர் விற்பனை நிலையங்கள் துவங்கப்
பட்டது.
ஆனால் அவரது மறைவிற்கு பிறகு தமிழகம் முழுவதும் பெரும்பாலான பேருந்து நிலையங்களில் திறக்கப்பட்ட அம்மா குடிநீர் விற்பனை கடைகள் பெரும்பாலும் மூடியே கிடக்கின்றது. இதை பற்றி தமிழக அரசு கண்டுகொள்வதில்லை. தமிழகத்தில் அடுத்த வருடம் முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக தடைவிதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள், பொதுமக்கள் விலை மலிவான வாட்டர் பாக்கெட் வாங்கி குடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
திண்டிவனத்தில்
பயணிகளின் பயன்பாட்டிற்காக துவங்கப்பட்ட அம்மா குடிநீர் விற்பனை கடை மேம்பாலத்தின் கீழே அமைந்துள்ளது. இந்த கடை எப்போதாவது ஒருமுறை மட்டுமே திறக்கப்படுகின்றது. அதுவும் திறக்கப்பட்டால் போதுமான அளவு வாட்டர் பாட்டில்கள் ஸ்டாக் இல்லாததால் விற்று தீர்ந்தவுடன் மீண்டும் கடை மூடப்படும் சூழ்நிலை ஏற்படுகின்றது. தினந்தோறும் லட்சக்கணக்கானவர்கள் வந்து செல்லும் நிலையில் அம்மா குடிநீர்
விற்பனையகத்தை பயணிகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Mummy Water Supply ,Store ,
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!