×

விவசாயிக்கு மிரட்டல் விடுத்த பெண் கைது

போடி, அக். 16: போடி புதூரை சேர்ந்த முருகன்(33). மாந்தோப்பு வைத்து விவசாயம் செய்து வருகிறார். போடி புதூர் போயன்துறையை சேர்ந்த சரஸ்வதி(44) என்வர் தோப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மாங்காய் பறித்துள்ளார். இதை கண்ட முருகன் கண்டித்து ேதாப்பை விட்டு வெளியேற்றி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரஸ்வதி அரிவாளுடன் முருகன் வீட்டிற்கு தேடி சென்று கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் இதுகுறித்து போடி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சரஸ்வதியை கைது செய்தனர்.

Tags :
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...