×

பைக் விபத்தில் முதியவர் பலி

உளுந்தூர்பேட்டை, அக். 16:  உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலம் செல்லும் சாலையில் அரசு மாணவியர் விடுதி அருகில் சம்பவத்தன்று அந்த வழியாக சென்ற இரண்டு இருசக்கர வாகனங்கள் எதிர்பாராதவிதமாக திரும்பும்போது மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பைக்கு
களில் வந்த உளுந்தாண்டார்கோயில் பகுதியை சேர்ந்த தம்பு
சாமி(70), அருண்(18), முருகன்(52), ரஜினி, கல்வராயன், ராஜவேல் ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதில் சிகிச்சை பலனின்றி தம்பு
சாமி உயிரிழந்தார். அருண் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை காவல்
நிலையத்தில் அருண் கொடுத்த புகாரின்
பேரில் இன்ஸ்பெக்டர் ஷாகுல்அமீது வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை