×

கேரளாவிற்கு பஸ்சில் ரேசன் அரிசி கடத்தல்

போடி, அக்.16: கேரளாவிற்கு பஸ்சில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை பறக்கும் படையில் பறிமுதல் செய்தனர். போடி, சின்னமனூரில் இருந்து ரேஷன் அரிசியை கேரளா மாநிலத்திற்கு கடத்துவதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பறக்கும் படை தலைமையிடத்து துணை தாசில்தார் ஜாஹீர்உசேன் ஆர்.ஐ பாலசுப்பிரமணி தலைமையில் போடியில் உள்ள 27 ரேஷன் கடை பகுதிகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது ரேஷன் கடையில் அரிசி மற்றும் பொருட்கள் வாங்கி வந்தவர்களிடம் கார்டு அளவிற்கு பொருட்கள் வாங்கினார்களா என்று விசாரித்தனர். போடி முந்தல் சாலையில் மூணாறு சென்ற தமிழக அரசு பஸ்சில் சோதனை செய்ததில் 3 மூட்டை ரேஷன் அரிசி இருந்தை பறிமுதல் செய்துடன், டிரைவர், கண்டக்டரை எச்சரித்தனர். சின்னமனூர் எரசக்கநாயக்கனூர் சாலையில் ஒருவர் கொண்டு வந்த 98 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். போடி, சின்னமனூரில் பறிமுதல் செய்யப்பட்ட 6 மூட்டை அரிசியை அரசு அரிசி கிட்டங்கியில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

Tags : Kerala ,
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...