×

எடைக்கல் சாரதா ஆஸ்ரமத்தில் நவராத்திரி விழா

உளுந்தூர்பேட்டை, அக். 16:
உளுந்தூர்பேட்டை அருகே எடைக்கல்
சாரதா ஆஸ்ரமத்தில் 9 நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழா கலாமந்திர் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்
தினம் காலை முதல் மாலை வரையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் குங்கும
அர்ச்சனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஊஞ்சலில் ராஜ மாதங்கி மீனாட்சி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ்
குமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். சாரதா ஆஸ்ரமத்தின் தலைவர் யத்தீஸ்வரி ராமகிருஷ்ணப்ரியாஅம்பா ஆன்மிக உரையாற்றினார்.
 ஆஸ்ரமத்தின் செயலாளர் யத்தீஸ்வரி அனந்தப்ரேமப்ரியாஅம்பா துவக்க உரையாற்றினார். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த ஏராளமானவர்கள்
கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை சாரதா ஆஸ்ரமத்தின் நிர்வாகிகள், சன்யாச சகோதரிகள் செய்து இருந்தனர். உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் ஷாகுல்அமீது, சப்- இன்ஸ்பெக்டர் அகிலன் உள்ளிட்டவர்கள் கலந்து
கொண்டு பாதுகாப்பு
ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

Tags : Navratri Festival ,
× RELATED ராமச்சந்திரா மெட்ரிக் பள்ளியில் நவராத்திரி விழா