×

வாரச்சந்தை 18ம் தேதிக்கு மாற்றம்

உளுந்தூர்பேட்டை, அக். 16: உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட உழவர்சந்தை பகுதியில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் காய்கறி வாரச்சந்தை மற்றும் ஆடு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நாளை (17ம் தேதி) மாலை உளுந்தூர்பேட்டையில் நடக்கும் அதிமுக 47ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ள உள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்படும் நிலை உள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க வழக்கமாக புதன்கிழமைகளில் நடைபெற்று வரும் சந்தை வரும் 18ம் தேதி நடக்கும் என பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

Tags : Weekend change ,
× RELATED வாரச்சந்தை இடமாற்றும் முடிவு பரிசீலனை செய்ய வலியுறுத்தல்