×

இரவுநேர மின்தடையால் பொதுமக்கள் அவதி

வானூர், அக். 16:  வானூர் பகுதியில் இரவு நேரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் தூக்கத்தை தொலைத்து அவதிப்பட்டு வருகின்றனர். வானூர் துணை மின் நிலையத்திலிருந்து வானூர், நயினார்பாளையம், வி.புதுப்பாக்கம், ஒட்டை மற்றும் நாராயணபுரம் ஆகிய கிராமங்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இரவு
7 மணி முதல் 12 மணி வரை அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இந்த நேரத்தில் தற்போது கொசுக்கடி அதிகம் உள்ளதால் பொதுமக்கள் தூக்கத்தை தொலைத்து அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.
 எனவே இரவு நேரத்தில் மின்
தடையில்லாமல் சீரான மின் வினியோகம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை