×

பெரியார் வீதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (65). கூலி தொழிலாளி.

புதுச்சேரி, அக். 16: புதுவை அரியாங்குப்பம் ஆர்கே நகர் பெரியார் வீதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (65). கூலி தொழிலாளி. கடந்த 4ம் தேதி காலையில் இவர், மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியே சென்றார்.
அதன்பிறகு அவர் திரும்பவில்லை. மனைவி மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது உறவினர் அறிவுசெல்வன் (37) என்பவர் அரியாங்குப்பம் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிந்து மாயமான ராமமூர்த்தியை தேடி வருகின்றனர்.
தலைமை தபால் நிலையத்தில் கலாம் பிறந்த நாள் விழா
புதுச்சேரி, அக். 16:  புதுச்சேரி தலைமை தபால் நிலையத்தில் தேசிய அஞ்சல் வார விழா மற்றும் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
தலைமை தபால் அதிகாரி செந்தில்குமார் தலைமை தாங்கி, அப்துல் கலாம் படத்தை திறந்து வைத்தார்.
டாக்டர் அப்துல் கலாம் மற்றும் தபால் பெட்டி உருவம் பொறிக்கப்பட்ட கேக்கை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அகில் நாயர் வெட்டினார். இதில் தபால் நிலைய ஊழியர்கள், பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.
 உதவி கோட்ட கண்காணிப்பாளர்கள் எஸ்.முருகன், சி.முருகன் ஆகியோர் மாணவிகளுக்கு அஞ்சலக சேவையை விளக்கி கூறினர். மேலும், மாணவிகளுக்கு சேமிப்பு பழக்கத்தினையும், சிறப்பு தபால் சேகரிக்கும் பழக்கத்தினையும், அதன் நன்மையையும் விளக்கி கூறினர். இவ்விழாவில் பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தபால் நிலைய ஊழியர்கள் ரட்சகநாதன், கணபதி, சுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Ramamurthy ,road ,Periyar ,coolie worker ,
× RELATED ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யக்...