×

வெள்ளவாரி வாய்க்கால் குப்பை கழிவுகள் அகற்றம்

புதுச்சேரி, அக். 16: புதுவை பொதுப்பணித்துறை மூலம் நகரப்பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காமராஜர் தொகுதிக்குட்பட்ட சாமிபிள்ளைத் தோட்டம் பகுதி வழியாக செல்லும் வெள்ளவாரி வாய்க்காலிலும் கடந்த வாரம் தூர்வாரப்பட்டது. அப்போது தூர்வாரப்பட்ட குப்பை கழிவுகளை ஊழியர்கள் அதே இடத்தில் குவித்து வைத்தனார். பல நாட்கள் கடந்த நிலையிலும், அந்த குப்பை கழிவுகள் அகற்றப்படவில்ைல.
இதுகுறித்து தினகரன் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து, நேற்று மதியம் சாமிப்பிள்ளைத்தோட்டத்திற்கு வந்த துப்புரவு ஊழியர்கள், அங்கு அகற்றப்படாமல் இருந்த குப்பை கழிவுகளை விரைவாக அப்புறப்படுத்தி டிராக்டரில் ஏற்றி சென்றனர். இப்பிரச்னையை தீர்க்க துரித நடவடிக்கை எடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Tags : flooding ,
× RELATED தேனி அணைப்பிள்ளையார் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு..!!