×

சாராயக்கடையில் தகராறு: 3 பேருக்கு கத்திக்குத்து

வில்லியனூர், அக். 16: வில்லியனூர் அருகே சாராயக்கடையில் ஏற்பட்ட தகராறில் 3 பேரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுவை மாநிலம் வில்லியனூர் அடுத்த தமிழக பகுதியான நல்லாத்தூரை சேர்ந்தவர்கள் தேசிங்கு (33), அய்யனார் (34) மற்றும் குமார் (34). இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த முரளி (33) என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முரளியை இவர்கள் 3 பேரும் மணக்குப்பம் பகுதியில் உள்ள சாராயக் கடையில் வைத்து தாக்கி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த குமார் அன்று மாலை மீண்டும் சாராயக்கடைக்கு வந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தேசிங்கு, ஐயனார், குமார் ஆகிய மூன்று பேரையும் குத்தியுள்ளார்.
இதில் மூவருக்கும் தலை, கால், கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் தேசிங்கு, அய்யனார் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். குமார் சிகிச்சை பெற்று திரும்பினார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குப்பதிவு செய்து முரளியை கைது செய்து சிறையில் அடைத்தார். சாராயக்கடையில் 3 பேர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...