×

நிதிநிறுவன பணத்தை பெற்று தரக்கோரி மனு கொடுக்கும் போராட்டம்

சிவகங்கை, அக். 16: சிவகங்கையில் தனியார் (பிஏசிஎல்) நிறுவனத்தில் கட்டிய பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர். தனியார் நிதி நிறுவனத்தில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பல ஆண்டுகளாக தவணை சீட்டு, நிதி சேமிப்பு உள்பட பல்வேறு வகையில் பணம் கட்டி வந்தனர். இந்நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அனைத்து அலுவலகங்களையும மூடியது. இதனால் ரூ.பல கோடி செலுத்தியவர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கட்டிய பணத்தை திரும்ப பெற்று தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி  பாதிக்கப்பட்ட முகவர்கள், முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கம் (சிஐடியூ) சார்பில் நூற்றுக்கணக்கனோர் சிஐடியூ மாவட்ட செயலாளர் வீரையா, முறைசாரத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி தலைமையில் நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர். இதில் தலைவர் சாமிநாதன், செயலாளர் சேவியர், பொருளாளர் முத்துராமலிங்கம், துணைத்தலைவர்கள் ராமனாதன், மைக்கேல்ஆரோக்கியசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : institution ,
× RELATED நியோமேக்ஸ் வழக்கு: போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு