×

விபத்தில் மளிகை கடை ஊழியர் பலி

குறிஞ்சிப்பாடி, அக். 16:  கடலூர் அடுத்த குடிகாடு மாடசாமி கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ரஞ்சித்குமார் (22). இவர் குள்ளஞ்சாவடியில் உள்ள மளிகை கடையில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று காலை இவர் வழக்கம்போல் கடைக்கு வந்தார்.
சிறிது நேரத்தில் ஏதோ ஒரு வேலையாக பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். குள்ளஞ்சாவடி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே வந்த போது எதிரே
கடலூரில் இருந்து குறிஞ்சிப்பாடி நோக்கி சென்ற
லாரி ரஞ்சித்குமார் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரஞ்சித்குமார் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த குள்ளஞ்சாவடி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சீனுவாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரஞ்சித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : accident ,grocery store employee ,
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...