×

30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, அக். 16:  முப்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில், ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில், சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ரேஷனுக்கு தனித்துறை, ஓய்வூதியம், தரமான எடைகளை பொருட்களை வழங்குதல், பொட்டல முறை, ஊழியர்களை பணிவரன்முறை படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,

நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணைத்தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் மாயாண்டி, மாவட்ட பொருளாளர் திருஞானம் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் தினகரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட செயலாளர் முத்துச்சாமி, ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : Demonstration ,ration shop employees ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்