×

கூழாங்கல் கடத்திய லாரி பறிமுதல்

பண்ருட்டி, அக். 16: பண்ருட்டி அருகே சின்னசேமகோட்டை பகுதியில் மெயின்ரோட்டில் அரசு அனுமதியின்றி லாரியில் கூழாங்கல் கடத்துவதாக புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடம் சென்று அவ்வழியே வந்த ஒரு லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி கூழாங்கல் கடத்துவது தெரிய வந்தது. இதனையடுத்து டிரைவர் மோகன்ராஜ்(20) என்பவரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.
குள்ளஞ்சாவடியில் துணிகரம்
பிஸ்கெட் பாக்கெட்டுகளுடன்
நின்றிருந்த வேன் திருட்டு
குறிஞ்சிப்பாடி, அக். 16: குள்ளஞ்சாவடி மார்க்கெட் அருகே பிஸ்கெட் பாக்கெட்டுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த வேனை மர்மநபர் திருடி சென்றுள்ளார். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி மகன் சாமிதுரை (37). இவர் சொந்தமாக பேக்கரி வைத்துள்ளார். மேலும் அங்கு பிஸ்கெட் தயாரித்து கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல் தனது வேனில் பிஸ்கெட் பாக்கெட்டுகளை ஏற்றிக்கொண்டு கடைகளுக்கு சப்ளை செய்து கொண்டிருந்தார்.
 குள்ளஞ்சாவடி மார்க்கெட் அருகே தனது வேனை நிறுத்திவிட்டு அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு பிஸ்கெட் சப்ளை செய்து வந்தார். அவசரத்தில் வேனில் இருந்து சாவியை எடுக்காமல் மறந்து விட்டார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்த போது பிஸ்கெட் பாக்கெட்டுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த வேனை காணவில்லை.
அதிர்ச்சியடைந்த சாமிதுரை அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தும் வேன் கிடைக்கவில்லை. மர்ம நபர் யாரோ வேனை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சாமிதுரை குள்ளஞ்சாவடி காவல்நிலையத்தில் வேனை கண்டுபிடித்து தருமாறு புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிந்து திருடு போன வேனை தேடி வருகின்றனர். பிஸ்கெட் பாக்கெட்டுகளுடன் திருடு போன வேனின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என தெரிகிறது.

Tags :
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு