×

தொழிலாளி மர்மச்சாவு

தூத்துக்குடி,அக்.16: தூத்துக்குடியில் மர்மமான முறையில் தொழிலாளி இறந்து கிடந்தார்.
தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்தவர் அந்தோணி முத்து மகன் சவரிராஜ்(35). இவர் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு ஸ்வீட் ஸ்டாலில் வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் சவரிராஜ், நேதாஜிநகர் பகுதியில் புதியதாக கட்டி வரும் வீட்டை பார்வையிட சென்றார். அதன் பின்னர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அவரது சகோதரர் செபஸ்டியான் அவரை தேடி சென்ற நிலையில் புதிய வீட்டின் மாடிப்படியில் சவரிராஜ் மர்மமான முறையில் இறந்த நிலையில் கிடந்தார். தகவலறிந்த சிப்காட் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னரே அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags :
× RELATED சாலை வளைவில் அபாய பள்ளம் சீரமைப்பு