மதுரை, அக். 16: மதுரை செல்லூர் அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்தவர் அறிவுராஜா என்ற ஹரிராஜா(25). ஓட்டல் நடத்தியதோடு, கொடுக்கல் வாங்கல் தொழிலும் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கடையில் இருந்த போது, அங்கு வந்த கும்பல் கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது. அறிவுராஜாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினருக்கும் இடையே இடப்பிரச்னை இருந்துள்ளது. இந்த ஆத்திரத்தில் அறிவுராஜா கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அறிவுராஜ் உறவினர்கள் சசி, மாயாண்டி, நிருபன், முத்துப்பாண்டி, ஹரி, சுதன் பாண்டி ஆகியோரை செல்லூர் போலீசார் தேடி வருகின்றனர். இதுபோல் செல்லூர் வைத்தியநாதபுரம் அருகே பாக்கியநாதபுரம் 2வது தெருவை சேர்ந்த பிரபல ரவுடி அசோக்குமார். இவர் மீது 2 கொலை வழக்கு மற்றும் இளம்பெண்ணை கடத்திய வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. நேற்று முன்தின இரவு அவரது வீட்டுக்கு வந்த கும்பல், அவரை கொலை செய்து விட்டு தப்பியது.