×

குண்டர் தடுப்பு சட்டத்தில் 3 கொள்ைளயர்கள் கைது

தென்காசி, அக். 16:  தென்காசி பகுதியில் பல்வேறு திருட்டு வழக்குகளில் பிடிபட்ட மூன்று பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
 தென்காசி ஆய்க்குடி பகுதியில் பூட்டி கிடந்த வீடுகளில் பூட்டை உடைத்து பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடந்தன. இதில் ஈடுபட்டதாக கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் செங்கோட்டை விசுவநாதபுரம் பகுதியைச் சேர்ந்த அஜி என்ற அஜ்மீர் காஜாஷெரீப் (27), கீழபள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முஸ்தபா கமால் (28), மேலூர் கே.சி.ரோடு பகுதியைச் சேர்ந்த காதர் மைதீன் ஆகிய மூவரையும் தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன்  தலைமையில் ஏட்டுகள் மாரியப்பன், மஜீத், வடிவேலு ஆகியோர் கொண்ட தனிப்படையினர் வாகன சோதனையின் போது கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 தற்போது 3 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். நெல்லை எஸ்.பி. அருண் சக்திகுமார் பரிந்துரையின் பெயரில் கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பிறப்பித்த உத்தரவின்பேரில் இதற்கான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டனர்.
கல்லறைகள் உடைத்து சேதம்
வீரவநல்லூர், அக். 16:   வீரவநல்லூர்- சீனியாபுரம்  சாலையில் ஆர்.சி. சபை சார்பில் கல்லறை தோட்டம் உள்ளது. நள்ளிரவு இங்கு வந்த மர்மநபர்கள் இங்கிருந்த 5 கல்லறைகளை உடைத்து சேதப்படுத்தி சென்றனர்.
தகவலறிந்து விரைந்துவந்து பார்வையிட்ட வீரவநல்லூர் போலீசார், மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது