×

நகை கடை அதிபரை மிரட்டி பணம் பறித்த இருவர் கைது

புளியங்குடி, அக். 16: புளியங்குடியில் நகை கடை உரிமையாளரை கத்திமுனையில் மிரட்டி பணம் பறித்த கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில் ரயில்வே பீடர்ரோடு முல்லைநகரை சேர்ந்தவர் தவசிக்கண்ணு மகன் முப்பிடாதி(40). நகை கடை நடத்தி வருகிறார். கடந்த 13ம்தேதி இவர்  பைக்கில் குற்றாலம் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
புளியங்குடி சிந்தாமணி பஸ்நிலையம் அருகில் சென்றபோது பைக்கில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் 2 பேர், முப்பிடாதியை கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூ.200ஐ பறித்து தப்ப முயன்றனர்.
அப்போது முப்பிடாதி கூச்சலிடவே அப்பகுதி வியாபாரிகள், வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து புளியங்குடி போலீசில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் அவர்கள் விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த குருசாமி மகன் சுந்தரபாண்டி(19) மற்றும் ரவி மகன் சிவகணேஷ்(19) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : jewelery shop owner ,
× RELATED 14 கிலோ தங்க நகைகள் கொள்ளை வழக்கில் நகைக்கடை உரிமையாளர் மகன் கைது