×

கூட்டுறவு கடன் சங்கங்களில் பழைய விலைக்கு உரம் விற்பனை கலெக்டர் தகவல்

திருவள்ளூர், அக். 16:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பழைய விலைக்கே உரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன என திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பழைய விலைக்கே உரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் விற்கப்படும் இப்கோ நிறுவன உரங்கள் பழைய விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றன.
வெளிச்சந்தையில் ₹1,360க்கு விற்கப்படும் ஒரு மூட்டை டிஏபி உரம் ₹1,290க்கு விற்கப்படுகிறது. ₹1,040க்கு விற்பனை செய்யப்படும் 20:20 காம்ப்ளக்ஸ் உரம் ₹950க்கும், ₹1,360க்கு விற்பனை செய்யப்படும் 10:26:26 உரம் ₹1,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெளிச்சந்தையை விட ₹50 முதல் ₹120 வரை கூட்டுறவுச் சங்கங்களில் விலை குறைவாக உள்ளதால், விவசாயிகள் தங்களுக்கு அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நேரில் சென்று உரத்தை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்...