கூடுவாஞ்சேரி,அக். 16: வண்டலூர் அருகே உடையும் நிலையில் உள்ள நல்லம்பாக்கம் ஏரிக்கரையை பலப்படுத்த ேவண்டும் என பொதுப்பணித் துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வண்டலூர் அடுத்த நல்லம்பாக்கம் ஊராட்சியில் நல்லம்பாக்கம், கண்டிகை, மல்ரோசாபுரம், அம்பேத்கர்நகர், காந்திநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இந்நிலையில், உடையும் அபாய நிலையில் உள்ள நல்லம்பாக்கம் ஏரிக்கரையை பலப்படுத்த வேண்டும் என பொதுப்பணித் துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் ஏரியில் ஆங்காங்கே மரண பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. ஏரிக்கரை முழுவதும் வேலிக்காத்தான் என்று கூறப்படும் சீமை கருவேல மரங்கள் அடர்த்தியாக காணப்படுகிறது.
இதனால் ஏரிக்கரையில் எளிதில் செல்வதற்காக பயணம் செய்யும் பைக் ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது லேசாக பெய்த மழைக்கே ஏரிக்கரையில் ஆங்காங்கே வெடிப்புகள் விட்டு காணப்படுகிறது.மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி ஏரிக்கரை பலம் இழந்து உடைந்தால் மிகப்பெரிய பேராபத்து ஏற்படும். எனவே இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.