×

தீராத வயிற்று வலியால் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

பல்லாவரம்,அக்.16: குன்றத்தூர் அடுத்த கலெட்டிப்பேட்டை, அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார் (20). இவர் சென்னை மேடவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் சமீப காலமாக பிரவீன்குமார் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
அவரது பெற்றோர் அவருக்கு பல இடங்களில் மருத்துவம் பார்த்தும், வயிற்று வலி மட்டும் குறையவில்லை.
இதனால் சமீப காலமாக பிரவீன்குமார் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்து வந்துள்ளார். நேற்று மாலையும் அதேபோல் அவருக்கு வயிற்று வலி ஏற்படவே, வலியால் துடித்த பிரவீன்குமார், வீட்டில் உள்ள தனது அறைக்கு சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு, மின்விசிறியில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் மகன் அறையின் உள்ளே சென்று வெகுநேரம் ஆகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், கதவை தட்டிப் பார்த்தனர், அப்பொழுதும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, பிரவீன்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.  இது குறித்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்த பிரவீன்குமார் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து கல்லூரி மாணவர் பிரவீன்குமார் நிஜமாகவே வயிற்று வலி காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,college student ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை