×

படாளம் அருகே பரபரப்பு புதுச்சேரி மதுபாட்டில்கள் 4500 சிக்கியது: லாரியும் பறிமுதல்

மதுராந்தகம், அக்.16: படாளம் அருகே புதுச்சேரி மதுபாட்டில்கள் 4500 லாரியுடன் பிடிபட்டது. லாரி மற்றும் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து கடத்தியவர்கள் பற்றி தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி படாளம் அருகே உள்ளது ஜானகிபுரம் கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 2 தினங்களாக கதவுகள் சாத்தப்பட்ட நிலையில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.
2 தினங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த லாரியை கிராம மக்கள் அருகில் சென்று பார்த்த போது, லாரியில் இருந்து சாராய வாடை வீசியது.
இதையடுத்து கிராம மக்கள் நேற்று படாளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் மூடப்பட்டிருந்த லாரியின் கதவுகளை போலீசார் திறந்து பார்த்த போது மற்றவர்களுக்கு தெரியாத வண்ணம் லாரிக்குள் ஒரு அறை இருந்ததை போலீசார் பார்த்தனர். பின்னர் அந்த அறையின் பூட்டை உடைத்து திறந்து பார்த்தபோது, அதன் உள்ளே சுமார் 4500 புதுச்சேரி மது பாட்டில்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த பாட்டில்களின் மொத்த மதிப்பு ரூ. 4லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதனை யார், எங்கிருந்து, எந்த இடத்திற்கு கடத்தி செல்ல கொண்டுவரப்பட்டது.
இதனை நடு வழியில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டதற்கு என்ன காரணம் என்று படாளம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியை போலீசார் பறிமுதல் செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags : Patalai ,larry ,
× RELATED லாரி மோதி மாணவர் பலி