×

காஞ்சி  கிருஷ்ணா கல்லூரியில் வெள்ளிவிழா கொண்டாட்டம்

காஞ்சிபுரம், அக்.16: காஞ்சிபுரம் அடுத்த கீழம்பியில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வெள்ளிவிழாக் கொண்டாட்டம் கல்லூரி வளாகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கல்லூரியின் நிறுவனர் பா.போஸ் தலைமை தாங்கினார். காஞ்சி கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை தாளாளர் அரங்கநாதன், தலைவர் மோகனரங்கன், செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் பாஸ்கர்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் வெங்கடேசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அனைத்திந்திய சுயநிதி தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைமை புரவலர் முனிரத்தினம் கலந்துகொண்டு வெள்ளி விழா மலரை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது: காஞ்சிபுரம் நகரம் கல்விச்சேவையில் சிறந்து விளங்குகிறது. கிராமப்புற, ஏழை, எளிய மாணவர்கள் கல்வி கற்க ஏற்ற நிறுவனமாக காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி மென்மேலும் சிறப்பு பெற்று பொன்விழா காண வாழ்த்துகிறேன். என்று பேசினார்.தொடர்ந்து தமிழ்நாடு சுயநிதி கலை மற்றும் அறிவியல் தொழில்சார்ந்த கல்லூரிகளின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் செல்வராஜ். தமிழ்நாடு சிறுபான்மை சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு இணைச்செயலாளர் பீட்டர் ஆகியோர் உரையாற்றினர். நிகழ்ச்சியின் இறுதியாக கல்லூரி துணைமுதல்வர் பிரகாஷ் நன்றி கூறினார்.

Tags : celebration ,Kanchi  ,Krishna College ,
× RELATED கருடன் கருணை